தமிழக அரசின் தற்போதைய நிதி நிலைமை தொடர்பாக அமைச்சர் பழனி வேல் தியாகராஜன் மற்றும் அதிகாரி களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் முக்கிய ஆலோசனை நடத்தினார். கரோனா தடுப்புப் பணிக்கான செலவுகளை சமாளிப்பது, புதிய திட்டங்களை செயல் படுத்துவது குறித்து இந்தக் கூட்டத் தில் ஆய்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடந்தது. பொதுத் தேர்தல் நடக்க விருந்ததால் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை கடந்த அதிமுக அரசு தாக்கல் செய்யவில்லை. கடந்த பிப்ரவரி 23-ம் தேதி அப்போதைய நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இடைக்கால பட்ஜெட்டை சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார். அவர் அளித்த அறிக்கையின்படி, தமிழகத்தின் மொத்த வரி வருவாய் ரூ.1 லட்சத்து 32,530 கோடியாகவும், செலவு ரூ.2 லட்சத்து 46,694 கோடியாகவும், வருவாய் பற்றாக்குறை ரூ.65,994 கோடியாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டது. மேலும், அரசின் கடன் ரூ.5.70 லட்சமாக இருக்கும் என வும் குறிப்பிடப்பட்டது. கடன் அதிகரித் துள்ளது குறித்து பல்வேறு தரப் பினரும் எதிர்மறையான கருத்துகளை தெரிவித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்