கோவையில் குடியிருப்பு பகுதியில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி தமிழக முதல்வரிடம் பெண்கள் நேற்று மனு அளித்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, பெண்கள் சிலர் முதல்வரை சந்தித்து மனு அளிக்க வந்திருப்பதாக காவல் துறையினரிடம் தெரிவித்தனர். ஆனால் திட்டமிடல் இல்லாத காரணத்தால் போலீஸார் அவர் களுக்கு அனுமதி மறுத்தனர். இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்