பறவைகளுக்கு தினமும் இரை,தண்ணீர் வழங்கி வரும் கடையநல்லூர் இளைஞர் சிட்டுக்குருவிகளுக்கு புகலிடம் அளிக்க தினமும்ஒரு கூடு செய்து வீடுகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறார்.

தென்காசி மாவட்டம், புளியங்குடியைச் சேர்ந்தவர் காஜா மைதீன் (26). இவர் கடந்த 4 ஆண்டுகளாக கடையநல்லூர், கிருஷ்ணாபுரத்தில் வசித்து வருகிறார். ஊறுகாய் வியாபாரம் செய்து வருகிறார். தனக்கு கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை பறவைகளுக்காக செலவிடுகிறார். கடந்த 3 ஆண்டுகளாக தனது வீட்டின் முன் பறவைகளுக்கு தண்ணீர் வைத்து தினமும் இரை வழங்கி வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்