தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம் உயர்வு மற்றும் கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக 2, 5, 10 லிட்டர் பாட்டில் குடிநீர் விற்பனை கடுமையாகச் சரிந்துள்ளது. கேன் தண்ணீர் விற்பனையும் பாதியாகக் குறைந்துவிட்டது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விற்கப்பட்ட 5 லட்சம் கேன் குடிநீர், தற்போது 2 முதல் 2.5 லட்சமாகக் குறைந்துவிட்டது.

தமிழகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியமும், சென்னையில் சென்னை குடிநீர் வாரியமும் மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்து வருகின்றன. இருப்பினும், மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதில் பாட்டில் குடிநீரும், கேன்களில் அடைக்கப்பட்ட குடிநீரும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தினமும் வெவ்வேறு கொள்ளளவு கொண்ட பல்லாயிரக்கணக்கான லிட்டர் பாட்டில் குடிநீரும், 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட 5 லட்சத்துக்கும் மேற்பட்ட கேன் குடிநீரும் விற்பனையாவது வழக்கம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்