ஒரத்தநாடு அருகே சாலையோரம் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர் சரிந்து விழுந்ததில் காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள மேல மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(44). இவரது தந்தை முத்துவீரப்பன் கடந்த சில தினங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து, தனது தந்தைக்கு படத் திறப்பு விழா நடத்த திட்டமிட்டிருந்த ரவிச்சந்திரன், அதற்காக மேலமேட்டுப்பட்டி நெடுஞ்சாலையோரம் பிளக்ஸ் பேனர் வைத்திருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்