மற்ற மருத்துவத் தேவைகளுக்கான ஆக்சிஜனை குறைத்து, கரோனா நோயாளிகளுக்கான ஆக்சிஜன் தேவையைப் பூர்த்தி செய்வது எப்படி என, மயக்கவியல் நிபுணர் விளக்கம் அளித்துள்ளார்.

கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் நுரையீரலுக்கு, காற்று மண்டலத்தில் இருக்கும் ஆக்சிஜனை சுவாசித்து எடுக்கும்திறன் குறைகிறது. இந்நோயாளிகளுக்கு முதன்மையான தேவையாக ஆக்சிஜன் உள்ளது. அச்சமயத்தில்தான் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் செலுத்தப்படுகிறது. தேவை அதிகரிப்புக்கு ஏற்ப ஆக்சிஜன் உற்பத்திஇல்லாததால்தான் தற்போது பலமாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்