சென்னை: தமிழகம் உள்பட 5 மாநில தேர்தல் நேற்றுடன் நிறைவு பெற்றது. அதைத் தொடர்ந்து 5 மாநில தேர்தலுக்கான கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. அதில் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் நடத்திய கருத்துக்கணிப்புகளில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரியவந்துள்ளன. இந்நிலையில் நாளை மறுதினம் மாநிலம் முழுவதும் 75 வாக்குப்பதிவு மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இந்நிலையில், திமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வேட்பாளர்களுடன் காணொலி காட்சி மூலம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். அப்போது, வாக்குப்பதிவு மையங்களில் திமுகவினர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.



from Dinakaran.com |30 Apr 2021 https://ift.tt/3xL2eZk