கோயம்பேடு சந்தையில் வணிகர்கள் மற்றும் தொழிலாளர்களிடம் கடந்த ஒரு மாதத்தில் நடத்தப்பட்ட 10,567 பரிசோதனைகளில் 29 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த ஆண்டு முக்கியமான கரோனா பரவல் மையமாக கோயம்பேடு சந்தை இருந்தது. இதைத்தொடர்ந்து சுமார் 3 மாதங்களுக்கு சந்தை மூடப்பட்டு, வெவ்வேறு இடங்களில் தற்காலிகமாக சந்தைகள் செயல்பட்டு வந்தன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்