சோழிங்கநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் அரவிந்த் ரமேஷ் கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனால் அவர் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. ஆனால் தொண்டர்கள் வேட்பாளர் இன்றி தீவிரமாக சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் சிகிச்சை முடிந்து நேற்று அரவிந்த் ரமேஷ் வீடு திரும்பினார். உடனடியாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவர் பள்ளிக்கரணை பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது மக்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் மலர் தூவியும், கிரேன் மூலம் 15 அடி உயர மாலை அணிவித்தும், செயற்கை யானை மூலம் மாலை அணிவித்தும், வீரவாள் வழங்கியும், புலியாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை போன்ற கலை நிகழ்ச்சிகளுடனும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்