கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் தேர்தலால் நல்ல வருவாய் கிடைப்பதாக டிரம்ஸ் இசைக் குழுவினர் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

சென்னையில் கோயில் திருவிழாக்கள், கட்சி விழாக்கள், இல்ல விழாக்கள், இறுதி ஊர்வலம் என எதுவாக இருந்தாலும் முதலில் வந்து நிர்பவர்கள் டிரம்ஸ் இசைக் குழுவினர். இவர்கள் வந்த பிறகு தான் விழாவே களைகட்டுகிறது. கரோனா பரவல் தடுப்பு ஊரடங்கால் டிரம்ஸ் இசைக் குழுவினரின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. தளர்வுகள் வழங்கப்பட்டாலும், 2020-க்கு முன்பு இருந்த வாய்ப்புகள் இப்போது இல்லை. இந்நிலையில் வாராது வந்த மாமணியாக தேர்தல் வந்தது. அதன் மூலம் நல்ல வருவாய் கிடைப்பதாக டிரம்ஸ் கலைஞர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்