ஆட்சி முடியும்போது பகட்டு அறிவிப்பு களால் சமூகநீதியை காக்க முடியாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரித்துள்ளார்.

திமுக சார்பில் சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ திடலில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. இதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்
றார். அனைத்து மனுக்களையும் ஒரு பெட்டியில் வைத்து பூட்டி சீல் வைத்தார். இந்நிகழ்ச்சியில், சென்னை மாவட்டத்தில் வசிக்
கும் நீச்சல் வீரர், கராத்தே வீரர்,கல்வியாளர் உள்ளிட்ட 15 சாதனையாளர்களுக்கு பரிசு வழங்கி மு.க.ஸ்டாலின் கவுரவித்தார். மேலும், கோரிக்கை மனுக்கள் அளித்தவர்களில் 10 பேரைத் தேர்ந்தெடுத்து அவர்கள் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்வதாக உறுதி அளித்தார். பின்னர், நிகழ்ச்சியில் திமுகதலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்