ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் மதிமுக இடம்பெற்றுள்ளது. இந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸுடன் கடந்த 25-ம் தேதி திமுக பேச்சு நடத்தியது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,மனித நேய மக்கள் கட்சியுடன் நேற்றுதிமுக பேச்சு நடத்தியது. திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினர் பேச்சு நடத்தினர். தொகுதிபங்கீடு குறித்து இன்று அறிவிக்கப்படும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் தெரிவித்தார்.

அதன் தொடர்ச்சியாக இன்று மதிமுக, விசிகவுடன் திமுக பேச்சு நடத்தவுள்ளது. மதிமுகவும், விசிகவும் தலா 10 தொகுதிகள் கேட்கும் நிலையில், இரு கட்சிகளுக்கு தலா 6 அல்லது 7 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று பேச்சு நடைபெறவுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்