சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் வேளையில் 2-வது முறையாக திமுக மாநில மாநாடு தள்ளிவைக்கப்பட்டுள்ளதால் அக்கட்சித் தொண்டர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். அவர்களை உற்சாகப்படுத்த திருச்சியில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்த கே.என்.நேரு முடிவு செய்துள்ளார்.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு திமுகவினரை தயார்படுத்தும் வகையில் திமுகவுக்கு திருப்புமுனை ஏற்படுத்தும் நகரம் என வர்ணிக்கப்படும் திருச்சியில் அக்கட்சியின் 11-வது மாநில மாநாட்டை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் அருகே 300 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு மாநாட்டு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்