ஒரு சாமானியக் குடிமகனின் கேள்விகளுக்கு பொறுப்பாக பதில் அளிக்கிற பக்குவம் அதிகார வர்க்கத்தில் உள்ள எல்லோருக்கும் இருப்பது இல்லை. இந்தப் பிரச்சினை காலம் காலமாக உலகம் எங்கும் இருக்கிறது.

சுந்திரமான நீதித்துறையை கொண்ட இந்தியாவில் எந்த மனுவும், தகுந்த முகாந்திரம் இன்றி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவது இல்லை. எனவே நீதிமன்றம் கேட்கும்போது, தனதுநிலைப்பாடு தவறு எனத் தெரிந்தால், மாற்றிக் கொள்வதாக, சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் அறிவித்த சம்பவங்கள் நிறைய உண்டு. அரசின் அறிவிப்பைத் திரும்பப் பெறுகிற நிர்வாக சுதந்திரம் கொண்டவர்களாக அதிகாரிகள் இருந்தனர். இவை எல்லாம் பொய்யாய், கனவாய், பழங்கதையாய் போய் விட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்