திருத்தணி அருகே திருவாலங்காடுவில் அமைந்துள்ள வடாரண்யேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் திருவாதிரை நட்சத்திர தினத்தன்று நடராஜருக்குஆருத்ரா அபிஷேகம் நடைபெறும். கரோனா தொற்றை தடுக்கும் வகையில், இந்த ஆண்டு மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பக்தர்கள் இல்லாமல் அபிஷேகத்தை நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்திருந்தது. இதற்கு பாஜக கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் எடுத்த முடிவில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, வடாரண்யேஸ்வரர் கோயிலில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று அதிகாலை வரை நடராஜருக்கு ஆருத்ரா அபிஷேகம் நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்