சுரானா நிறுவனத்தின் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 103 கிலோ தங்கம் மாயமானது தொடர்பாக 22 நிமிட வீடியோ ஆதாரம் சிபிசிஐடி போலீஸாருக்கு கிடைத்துள்ளது.

சென்னை என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள சுரானா நிறுவனம் தங்கம் இறக்குமதியில் மோசடி செய்ததாக கூறி, கடந்த 2012-ம் ஆண்டு சிபிஐ அதிகாரிகள் இந்த நிறுவனத்தில் சோதனை நடத்தி, 400 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, சுரானா நிறுவனத்தின் மீதும் உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீதும் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. பறிமுதல் செய்யப்பட்ட 400 கிலோ தங்கத்தையும், சுரானா நிறுவனத்தில் உள்ள லாக்கர்களில் வைத்து சீல் வைத்து, அதன் 72 சாவிகளும் 400 கிலோ தங்கமும் பறிமுதல் ஆவணமும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்