உள்ளகரம் - புழுதிவாக்கம் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முடிந்து இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பலஇடங்களில் கழிவுநீர் செல்லாமல் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் இத்திட்டம் தோல்வியா என பொதுமக்கள் மத்தியில் கேள்வியும் சந்தேகமும் எழுந்துள்ளது,

சென்னை மாநகராட்சி, பெருங்குடி மண்டலத்தில் 168, 169 வார்டுகளுக்கு உட்பட்ட உள்ளகரம் - புழுதிவாக்கம் பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் 2011-ம் ஆண்டு ரூ.34.01 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டன. 2019-ம் ஆண்டு நிறைவுற்ற இத்திட்டத்துக்காக 79,524 கி.மீ தூரத்துக்கு குழாய் பதிக்கப்பட்டுள்ளன. அனைத்து வீடுகளும் கழிவுநீர் இணைப்பு பெற்று பயன்பெறும் வகையில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டு இணைப்புகள் வழங்கப்பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்