தமிழகத்தில் இயக்கப்பட்டு வரும் 13 சிறப்பு ரயில்களில் பொங்கல் டிக்கெட் முன்பதிவு 70 சதவீதம் முடிந்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் உட்பட பல்வேறு வழித்தடங்களில் 13 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 2021-ம்ஆண்டு ஜன.14 முதல் 17-ம் தேதிவரை 4 நாட்கள் பொங்கல் விடுமுறை வருகிறது. இதையொட்டி சிறப்பு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். அதன்படி, ஜன.12, 13-ம் தேதிகளில் விரைவு ரயில்களில் படுக்கை வசதி கொண்ட டிக்கெட்கள் பெரும்பாலும் விற்றுவிட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்