சர்தார் வல்லபபாய் பட்டேல் பிறந்தநாளை முன்னிட்டு, ஆளுநர் மாளிகை, தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள், காவல்துறை தலைமையகம் ஆகியவற்றில் தேசிய ஒருமைப்பாட்டு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.

சர்தார் வல்லபபாய் பட்டேல் பிறந்தநாளான அக்.31-ம் தேதிஆண்டுதோறும் தேசிய ஒருமைப்பாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் பட்டேல் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு ஆளுநர்பன்வாரிலால் புரோஹித் நேற்றுமலர்தூவி மரியாதை செலுத்தினார். ஆளுநர் மாளிகையின் பிரதான வாசல் எதிரே உள்ள பட்டேல் சிலைக்கும் மரியாதை செலுத்தினார். ஆளுநர் தலைமையில், செயலர் ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல், பாதுகாப்பு அதிகாரிகள், பணியாளர்கள் ஆகியோர் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்