எங்களின் உறுதியான முயற்சியும், மாநிலத்தின் முன்னேற்றத்துக்கான அர்ப்பணிப்புமே சிறந்த நிர்வாகத்தில் தமிழகம் இடம் பெற்றதற்கு காரணமாக அமைந்துள்ளது என்று முதல்வர் பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இஸ்ரோ முன்னாள் தலைவர்கே.கஸ்தூரிரங்கன் தலைமையில் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ‘பப்ளிக் அஃபேர்ஸ் சென்டர்’, சிறந்த ஆட்சி நிர்வாகத்தை தரும் மாநிலங்கள் குறித்து ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வு முடிவை நேற்று முன்தினம் வெளியிட்டது. அதில், சிறந்த ஆட்சி நிர்வாகத்தில் அதிக புள்ளிகளை பெற்று பெரிய மாநிலங்களில் முதலிடத்தை கேரளாவும், 2-ம் இடத்தை தமிழகமும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்