விவசாயிகள் நலனுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் திருச்சி நெ.1 டோல்கேட்டில் நேற்று அறப்போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் கூறியது:

மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்குவதற்காக தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்ட பிறகே ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். தாமதத்துக்கான காரணத்தை ஆளுநரும், முதல்வரும் விளக்க வேண்டும். அதேபோல, நீதியரசர் கலையரசன் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கூறியிருந்த நிலையில், மாநில அரசு 7.5 சதவீதம் மட்டுமே ஒதுக்கீடு செய்தது ஏன்?.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்