வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம், எண்ணூரில் தண்ணீர் செல்லும் பாதைகளை தூர்வாரி, ஆழப்படுத்தி அகலப்படுத்தும் பணிகளை ஆட்சியர் பொன்னையா நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர்கூறியதாவது:

வடகிழக்கு பருவமழையை முன் னிட்டு, தண்ணீர் செல்லும் பாதைகளை தூர்வாரி, ஆழப்படுத்தி அகலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின் றன. எண்ணூர் நெட்டுக்குப்பம் முகத்துவாரப் பகுதியில் ஆங்காங்கே உருவாகும் மணல் திட்டுக்களால் தண்ணீர் செல்லும் பாதை தடைபடுகிறது. எனவே,அப்பகுதியில் ராட்சத இயந்திரங்களைக் கொண்டு மணல் திட்டுகளை அப்புறப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்