ராமநாதபுரம் : தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், '7.5% உள் ஒதுக்கீடு விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கை மிக மோசம் அடைந்துள்ளது. மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன்பே 7.5% உள் ஒதுக்கீடு அரசாணையை வெளியிட்டு இருக்க வேண்டும்.அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்த ஆண்டே மருத்துவ படிப்பில் இடம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றார்.



from Dinakaran.com |30 Oct 2020 https://ift.tt/2JlmGez