சென்னை : சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், ‘சென்னையில் 13 இடங்களில் தான் மழை நீர் தேங்கியுள்ளது. 109 இடங்களில் படகுகள் தயார் நிலையில் இருக்கின்றன’ என்று கூறினார். மேலும், பேசிய அவர்,' ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்கும் வகையில் 7.5% இட ஒதுக்கீடு தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டது. 7.5% உள் ஒதுக்கீடு தொடர்பான அரசாணையில் எந்த பிரச்னையும் இல்லை .சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் அதிமுக அரசு தொடர்ந்து செயல்படும்,' என்றும் தெரிவித்தார்.



from Dinakaran.com |30 Oct 2020 https://ift.tt/37Sa7RY