சென்னை அப்போலோ மருத்துவமனையில் இதய நோய்களை ஒரே பரிசோதனையில் கண்டறியும் அதிநவீனசி.டி.ஸ்கேனர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை அப்போலோ மருத்துவமனையில் இதய நோய்களை ஒரே பரிசோதனையில் கண்டறிய அதிநவீன ‘அக்விலியன் ஒன் பிரிசம் 640 ஸ்லைஸ் சி.டி.ஸ்கேனர்’ அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அப்போலோ மருத்துவமனைகள் குழுமத் தலைவர் பிரதாப் சி.ரெட்டி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பிரீத்தா ரெட்டி, நிர்வாக இயக்குநர் சுனிதா ரெட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அதிநவீன கருவியின் செயல்பாட்டைத் தொடங்கி வைத்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்