கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர் இறந்துவிட்டதாகக் கூறி, அவரது உறவினர்களிடம் வேறு ஒருவரின் உடலை ஒப்படைத்துள்ளனர். இடுகாட்டில் முகத்தைப் பார்த்துவிட்டு உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் தொட்டியத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சியப்பன்(55). சுய நினைவின்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். உடல் சற்று முன்னேற்றமடைந்த நிலையில், மற்றொரு வார்டுக்கு மாற்றப்பட்டார். கரோனா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்