மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா நிலைய இல்லத்தில் செய்தித் துறை இயக்குநர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த, போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையத்தை தமிழக அரசு கையகப்படுத்தி, நினைவு இல்லமாக்குவதற்கான அவசரச் சட்டத்தை பிறப்பித்தது. இதை எதிர்த்து தீபா, தீபக் ஆகியோர் நீதிமன்றத்தை நாடிய நிலையில், நினைவு இல்லமாக்குவதற்கு தடையில்லை என்று நீதிமன்றம் தெரிவித்துவிட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்