தமிழகத்தில் 9-ம் கட்ட ஊரடங்கு இன்று முதல் கூடுதல் தளர்வுகளுடன் தொடங்குகிறது.

கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து 8 கட்டமாக அடுத்தடுத்த தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கானது நேற்றுடன் முடிவுக்கு வந்தது. முன்னதாக நேற்று முன்தினம் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவுடன் நடத்திய ஆலோசனைக்குப்பின், முதல்வர் பழனிசாமி, ஏற்கெனவே உள்ள கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் அக்டோபர் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்