சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த எம்.ஆர்.தியாகராஜன் என்பவர் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வில் கடந்த 2016-ம் ஆண்டு தாக்கல் செய்த மனுவில், “திருவொற்றியூரில் இயங்கி வரும் கேடிவி ஆயில் மில், தண்டையார்பேட்டையில் இயங்கி வரும் கேடிவி ஹெல்த் ஃபுட் ஆகிய சமையல் எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்கள் உரிய அனுமதி இன்றி நிறுவப்பட்டுள்ளன. எனவே இந்நிறுவனங்களை மூட உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இதை விசாரித்த அமர்வு, இந்நிறுவனங்களை மூட உத்தரவிட்டு, சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தியதற்காக கேடிவி ஆயில் மில் நிறுவனத்துக்கு ரூ.25 லட்சம்அபராதம் விதித்தது. அதன் பின்னர் அந்நிறுவனங்கள் சுற்றுச்சூழல் அனுமதி பெற்று இயங்கத்தொடங்கின. அதை எதிர்த்து மனுதாரர் பசுமைத் தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்