காஞ்சிபுரம்: கொரோனா பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.காஞ்சிபுரம் பெரியார் நினைவுத்தூண் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நகர செயலாளர் சங்கர் தலைமை தாங்கினார். கொரோனா கால நிவாரணமாக மத்திய அரசு ஆறு மாத காலத்திற்கு மாதம் ரூ.7500 நிவாரணம் வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



from Dinakaran.com |01 Sep 2020 https://ift.tt/3jyg2yh