காஞ்சிபுரம்: தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து கோவிட்-19 வைரஸ் தொற்று காலத்தில் வேலை வாய்ப்பினை இழந்து பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள் தொழில் தொடங்க கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா தலைமை தாங்கினார். ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின், தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தில் கீழ் ரூ.75.50 லட்சம் மதிப்பீட்டில் 18 உற்பத்தியாளர் குழு மற்றும் 4 தொழில் குழுக்களுக்கு மானியத்துடனும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் 18 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி நேரடி கடன் ரூ.1.02 கோடி என 40 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், ஸ்ரீ பெரும்புதூர் எம்.எல்.ஏ பழனி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீ தர், முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வாலாஜாபாத் கணேசன்,  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



from Dinakaran.com |01 Sep 2020 https://ift.tt/3hKD7gE