சென்னையில் பயணிகளின் வருகைக்கு ஏற்றவாறு நாளை முதல் மாநகரபேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பேருந்துகளின் இயக்க எல்லை இன்று அறிவிக்கப்படுகிறது.

கரோனா ஊரடங்கில் தமிழக அரசின்புதிய தளர்வின்படி, வரும் 1-ம் தேதி (நாளை) முதல் மாவட்டத்துக்குள்ளான பொது மற்றும் தனியார் பேருந்து சேவைவழிகாட்டு நெறிமுறைகளுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. இருப்பினும், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் எல்லை சென்னையையும் தாண்டி திருவள்ளூர், செங்கை,காஞ்சி மாவட்டங்கள் வரை உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்