வாட்ஸ்-அப் வீடியோ அழைப்புகள் மூலம் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட புகார்களின் விவரங்கள் குறித்து தன்னிடம் தெரிவிக்க வேண்டும் என துணை ஆணையர்களுக்கு காவல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.

கரோனா பரவலையடுத்து பொதுமக்கள் காவல் ஆணையர் அலுவலகம் வந்து நேரில் புகார் அளிக்க வேண்டிய தேவை இல்லை. பொதுமக்கள் தங்கள் குறைகளை வாட்ஸ்-அப் வீடியோ அழைப்பு (வாட்ஸ்-அப் வீடியோ கால்) வழியாக திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் நண்பகல் 12 முதல் 1 மணி வரை தன்னிடம் (63691 00100) தெரிவிக்கலாம் என காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அறிவித்திருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்