சாதகமான வானிலை நிலவுவதால் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும்போது, ‘‘வரும் நாட்களில் தமிழகத்தில் அதிக மழை கிடைப்பதற்கான சாதகமான வானிலை நிலவுகிறது. ராஜஸ்தான், டெல்லி வழியாக வடக்கு வங்கக் கடல் வரை செல்லும் தென்மேற்கு பருவ மழைக்குகாரணமாக விளங்கும் மைய அச்சு வரும் நாட்களில் இமயமலை அடிவாரத்தை நோக்கி நகர உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்