பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு ஒன்றியம் புண்ணியம் கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 70 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் கட்டிடத்திற்கு பூமி பூஜை நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், ஒன்றிய குழுத் தலைவர் ஜான்சிராணி விஸ்வநாதன் தலைமை வகித்தார். ஊராட்சி மன்றத் தலைவர் முனிரத்தினம் வரவேற்றார். இதில், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் பி.எம்.நரசிம்மன் கலந்துக்கொண்டு  சமுதாயக்கூடம் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கிவைத்தார். நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சேகர், அருள் உட்பட அரசு அலுவலர்கள், அதிமுக நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.



from Dinakaran.com |31 Aug 2020 https://ift.tt/2EOL0Dn