சென்னைக் குடிநீருக்காக கண்டலேறு அணையிலிருந்து செப்டம்பர்2-ம் வாரத்தில் கிருஷ்ணா நீர் திறக்கப்படும் என, தெலுங்கு-கங்கை திட்ட தொழில்நுட்ப வல்லுநர் குழு கூட்டத்தில் ஆந்திர அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

தெலுங்கு கங்கை திட்ட ஒப்பந்தப்படி, ஆந்திர அரசு கண்டலேறு அணையிலிருந்து, 12 டிஎம்சி கிருஷ்ணா நீரை சென்னைக் குடிநீர் தேவைக்காக வழங்கவேண்டும். அதன்படி, முதல் தவணையாக ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சியும், 2-வது தவணையாக ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சியும் தரவேண்டும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்