மனிதனுக்கு உணவு, உடை, இருப்பிடம் அத்தியாவசியம் போல தொழில்நுட்பம் அடிப்படையாகி விட்டது. பிறப்பு முதல் இறப்பு வரை அறிவியலும், தொழில்நுட்பமும் நிழல்போல் நம்மைப் பின் தொடர்கின்றன. ஒரு தகவல் கடல் கடந்து, நாடு கடந்து வேறொருவரிடம் சென்றடைய நாட்கள், மாதங்கள், ஆண்டுகள் என இருந்த காலம் மாறி தற்போது நொடிப் பொழுதில் சென்றடைந்து விடுகிறது.

கரோனா ஊரடங்கால் தொழில் நுட்பத்தின் பயன்பாடு மேலும் இரட்டிப்பாகி விட்டது. ஆனால், பயனுள்ள தொலை தொடர்பு சாதனங்கள், செயலிகள், சமூக வலை தளங்களை தற்போது சிலர் தவறான நோக்கத்துக்காக பயன்படுத்துகின்றனர். இவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் கூட, நடிகர் சரத்குமார் பேசுவது போன்று போலி அழைப்புகள் விடுக்கப்பட்டது குறித்து சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். இந்த வகை குற்றங்கள் ‘சைபர்’ குற்றங்கள். இதுபோன்ற குற்றங்கள் தற்போது அதிகரித்து வருவதாக போலீஸார் கவலை தெரிவித்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்