ஊரடங்கால் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளதால், ஆட்டோக்களுக்கு போதிய சவாரி கிடைக்கவில்லை. இதனால், தொழிலாளர்கள் ஆட்டோக்களில் காய்கறிகள், பழங்களை கொண்டு சென்று குடியிருப்பு பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனர்.

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒட்டுமொத்த போக்குவரத்து சேவையும் முடங்கியுள்ளன. மற்றொருபுறம் கரோனாஅச்சத்தால் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்