தஞ்சாவூர் மாவட்டத்தில் பலரது வங்கிக் கணக்குகளிலிருந்து ரூ.5 கோடிக்கு மேல் பணம் எடுக்கப்பட்டு மோசடி நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த பல நாட்களாக பல்வேறு வங்கிகளின் வாடிக்கையாளர் களின் கணக்கிலிருந்து தொடர்ந்து பணம் எடுத்து மோசடி நடைபெற்று வருகிறது. இதில் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் வங்கிக்கு சென்று கேட்டபோது, வங்கி அதிகாரிகள் இதுதொடர்பாக எங்களுக்கு தெரியாது என பதில் அளித்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட சிலர் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்